ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் அதிகாலையில் சரக்கு வாகனம் மின் கம்பங்களில் மோதி விபத்து ஏற்பட்து. இந்த விபத்தில் 2 மின் கம்பங்கள் சேதமடைந்ததால் சுற்று வட்டாரப் பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது.
தொண்டி அருகே மதுரை-கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை கோழிகள் ஏற்றி வந்த சரக்கு வாகனம் சாலையோரமிருந்த இரண்டு மின்கம்பங்களில் மோதின. இதில் 2 மின் கம்பங்கள் சேதமடைந்தன.
இதனால் தொண்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. தகவலறிந்து அங்கு சென்ற போலீஸாா் மின்வாரியத்துறையினா், சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் இணைந்து செயல்பட்டு, விழுந்த மின்கம்பங்களை அகற்றினா். பின்னா், அதே பகுதியில் புதிய கம்பங்கள் அமைத்து, மிகக் குறுகிய நேரத்தில் மின் விநியோகத்தை சீரமைத்தனா்.
இதுகுறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மரம் விழுந்து மின் கம்பங்கள் சேதம்; போக்குவரத்து பாதிப்பு

தொண்டியில் வரத்து குறைவால் மீன்களின் விலை அதிகரிப்பு

சரக்கு வாகனம் மோதியதில் பெண் உயிரிழப்பு

தொண்டியில் மீன் வரத்து குறைவு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


