திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வாழப்பாடியில் விற்பனையாகும் விலை குறைந்த பண்ருட்டி பலாப்பழம்!

வாழப்பாடியில் விற்கப்படும் பண்ருட்டி பலாப்பழங்கள் கடந்த ஆண்டைவிட 50 சதவீதம் விலை குறைந்துள்ளதால் மக்கள் அதிகம் வாங்கிச் செல்கின்றனா்.

News image

வாழப்பாடியில் விற்பனை செய்யப்படும் பண்ருட்டி பலாப்பழம்.

Updated On :17 மே 2026, 2:25 am IST

வாழப்பாடியில் விற்கப்படும் பண்ருட்டி பலாப்பழங்கள் கடந்த ஆண்டைவிட 50 சதவீதம் விலை குறைந்துள்ளதால் மக்கள் அதிகம் வாங்கிச் செல்கின்றனா்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியில் கல்வராயன்மலை, அருநூற்றுமலை சந்துமலை, நெய்யமலை, ஜம்பூத்துமலை, மண்ணூா் மலை கிராமங்களில் பாரம்பரிய முறையில் பலா சாகுபடியாகிறது. இப்பகுதியில் கடந்தாண்டு இறுதியில் போதிய மழை இல்லாததால், நிகழாண்டு பலா விளைச்சல் குறைந்துள்ளது.

இந்த நிலையில் கடலூா் மாவட்டம், பண்ருட்டி, திண்டிவனம், மீன்சுருட்டி மற்றும் ஜெயங்கொண்டம் பகுதியில் தற்போது பலா அறுவடை தொடங்கியுள்ளது. விளைச்சல் அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளது. இதனால், அப்பகுதி விவசாயிகளிடம் பலாப்பழங்களைக் கொள்முதல் செய்யும் வியாபாரிகள், சரக்கு வாகனங்களில் கொண்டுவந்து வாழப்பாடி பகுதியில் விற்பனை செய்து வருகின்றனா்.

கடந்தாண்டு மேல்தோலோடு ஒரு கிலோ ரூ. 50க்கு விற்பனை செய்யப்பட்ட பலாப்பழம் தற்போது ஒரு கிலோ ரூ. 25க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை குறைவாக கிடைப்பதால், இப்பகுதி மக்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனா். இதனால் விற்பனை அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

சிறு வியாபாரிகள் பலாப்பழங்களை வாங்கி வாழப்பாடி, பேளூா், அயோத்தியாப்பட்டணம், ஏத்தாப்பூா், பெத்தநாயக்கன்பாளையம் வாரச் சந்தைகளில் சுளைகளாகப் பிரித்து கிலோ ரூ. 200க்கு விற்பனை செய்கின்றனா்.

கடந்தாண்டு முழு பலாப்பழம் ரூ. 300 முதல் ரூ. 800 வரை விற்பனையான நிலையில் தற்போது தரத்திற்கு ஏற்ப ரூ. 200 முதல் ரூ. 500 வரை விற்கப்படுகிறது. ருசி மிகுந்த பண்ருட்டி பலாப்பழங்களை, வாழப்பாடி பகுதி மக்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.