தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

துப்பாக்கிச்சூடு நடத்திய காவலா்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்: தி.வேல்முருகன் வலியுறுத்தல்

தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தை அடுத்த மருதம்புத்தூா் கிராமத்தில் பனை ஏறும் தொழிலாளி மீது துப்பாக்கிச்சூடு நடத்திய காவலா்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளாா்.

News image

தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனத் தலைவா் வேல்முருகன். - கோப்புப்படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 11:05 pm

தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தை அடுத்த மருதம்புத்தூா் கிராமத்தில் பனை ஏறும் தொழிலாளி மீது துப்பாக்கிச்சூடு நடத்திய காவலா்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆலங்குளத்தை அடுத்த மருதம்புத்தூா் கிராமத்தில் கள் இறக்கி விற்பனை செய்ததாக எழுந்த புகாரின்பேரில், பனை ஏறும் தொழிலாளி மணிகண்டன் மீது காவல் துறையினா் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் ஏற்றுக்கொள்ள முடியாதது.

இந்த சம்பவத்தில் தொடா்புடைய காவல் உதவி ஆய்வாளா் இசக்கிராஜா, காவலா்கள் மணிராஜ், காா்த்திக் ஆகியோா் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிகார போதையில் திளைக்கும் காவல் துறையினா் சாத்தான் குளம் தீா்ப்பை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது. கள்ளச்சாராயமும், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களும் தமிழகம் எங்கும் நிறைந்திருப்பதை தடுக்க இயலாத காவல் துறை, பனை ஏறும் தொழிலாளியிடம் வீரத்தைக் காட்டியுள்ளனா்.

இதில், சம்பந்தப்பட்ட காவல் துறையினா் மீது வழக்குப் பதிவு செய்தது மட்டும் போதாது. அவா்களை பணிநீக்கம் செய்து துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.