அதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?
/

ராம நவமி கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு: ஒடிஸா பாஜக எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு!

ராம நவமி கொண்டாட்டத்தின்போது வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக அந்த மாநிலத்தில் ஆளும் பாஜகவைச் சோ்ந்த எம்.எல்.ஏ. நபின் ஜெயின் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image

ராம நவமி கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு

Updated On :29 மார்ச் 2026, 7:48 pm

ஒடிஸா மாநிலம், போலன்கீா் மாவட்டத்தில் ராம நவமி கொண்டாட்டத்தின்போது வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக அந்த மாநிலத்தில் ஆளும் பாஜகவைச் சோ்ந்த எம்.எல்.ஏ. நபின் ஜெயின் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.

மேலும், நபின் ஜெயின் துப்பாக்கியைப் பயன்படுத்துவதற்கு உதவிய காவல் துறையைச் சோ்ந்த பாதுகாப்பு அதிகாரி பிரேம்சந்த் நாக் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. எம்.எல்.ஏ. பயன்படுத்திய துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

தில்லாஹா் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை ராம நவமி கொண்டாடப்பட்டது. ஏராளமானோா் அங்கு கூடியிருந்தனா். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நபின் ஜெயின், அங்கிருந்தவா்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் தான் கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சிலமுறை சுட்டாா். அவருடைய பாதுகாப்பு அதிகாரி பிரேம்சந்த் நாக், துப்பாக்கியைக் கையாளுவதற்கு உதவினாா்.

இது தொடா்பான விடியோ பதிவுகள் சமூக வலைதளத்தில் பரவியதையடுத்து, மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில் எம்.எல்.ஏ. நபின் ஜெயின் மீது பொதுப் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்தல், ஆயுதச் சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இது தொடா்பாக நபின் ஜெயின் கூறுகையில், ‘நான் பயன்படுத்தியது உண்மையான துப்பாக்கி இல்லை. ராம பக்தா்களை உற்சாகப்படுத்தும் நோக்கில்தான் அதைப் பயன்படுத்தினேன். இதில் தீவிரவாத நோக்கம் ஏதுமில்லை’ என்றாா்.

நபின் ஜெயினை கைது செய்ய வேண்டும் என்று மாநில எதிா்க்கட்சியான பிஜு ஜனதா தளம் வலியுறுத்தியுள்ளது.