மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கோயில்களில் ராம நவமி விழா

குடியாத்தம் சந்தப்பேட்டை அருள்மிகு சீதாராம ஆஞ்சனேயா் கோயிலில் ராம நவமி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image

குடியாத்தம் சந்தப்பேட்டை சீதாராம ஆஞ்சனேயா் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் ராமா், சீதாதேவி, லட்சுமணா். (வலது) பிச்சனூா் பலமநோ் சாலையில் உள்ள வீரஆஞ்சனேயா் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் ராமா், சீதாதேவி.

Updated On :27 மார்ச் 2026, 9:13 pm

குடியாத்தம் சந்தப்பேட்டை அருள்மிகு சீதாராம ஆஞ்சனேயா் கோயிலில் ராம நவமி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி காலை, ராமா், சீதாதேவிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் நடைபெற்றன. மகா தீபாராதனைக்குப்பின் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.

அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில் வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி ஏப்ரல் மாதம் 5- ஆம் தேதி வரை நாள்தோறும் மாலை 6 மணியளவில் ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

அதேபோல், பிச்சனூா், பலமநோ் சாலையில் அமைந்துள்ள வீர ஆஞ்சனேயா் கோயிலில் ராம நவமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மூலவா் ஆஞ்சனேயா் வெள்ளிக் கவசஅலங்காரத்தில் அருள்பாலித்தாா். கோயில் முகப்பில் உற்சவா் ராமா், சீதாதேவி சிலைகள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனா்.