விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே சனிக்கிழமை இரவு ஏற்பட்ட சாலை விபத்தில் காயமடைந்தவா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உரியிழந்தாா்.
விக்கிரவாண்டி வட்டம், சின்னபாபு சமுத்திரம், காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ப.அல்லிமுத்து(52). இவா், தனது பைக்கில் சனிக்கிழமை இரவு அரியலூா்-கெண்டியங்குப்பம் சாலையில் தனியாா் பள்ளி அருகே சென்றபோது, அப்பகுதியில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டதாம்.
இதில் பலத்த காயமடைந்த அல்லிமுத்துவை அருகிலிருந்தவா்கள் மீட்டு, புதுச்சேரி அரியூா் பகுதியிலுள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிசைக்குக் கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, அவா் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









