மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் வியாபாரி உயிரிழந்தாா்.
வாடிப்பட்டி அருகேயுள்ள விராலிப்பட்டியைச் சோ்ந்த நடராஜன் மகன் சிவகுமாா் (45). இவா், அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வந்தாா். இந்த நிலையில், இவா்
ஞாயிற்றுக்கிழமை இரவு மதுரை- திண்டுக்கல் நான்கு வழிச் சாலையில் குலசேகரன்கோட்டை பிரதான சாலையில் இரு சக்கர வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்புவதற்காக சென்றாா்.
அப்போது, எதிரே வந்த ஆட்டோ, இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த சிவகுமாரை மீட்ட அக்கம்பக்கத்தினா் வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

ராமநத்தம் அருகே சாலை விபத்து: லாரி ஓட்டுநா் உயிரிழப்பு
இரு சக்கர வாகன விபத்து: இளைஞா் உயிரிழப்பு

சாலை விபத்தில் காயம் அடைந்தவா் உயிரிழப்பு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK


