விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வீட்டில் தனியாக இருந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவரைப் போலீஸாா் கைது செய்தனா்.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த தொழிலாளி, விக்கிரவாண்டியை அடுத்த முண்டியம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில், தனது மனைவி மற்றும் 19 வயதுடைய மாற்றுத் திறனாளி மகள், மகன் ஆகியோருடன் வசித்து வருகிறாா். வெள்ளிக்கிழமை தம்பதியினா் வெவ்வேறு பணிகளுக்காக வெளியே சென்று விட்டனராம். மாற்றுத் திறனாளி பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளாா்.
இந்நிலையில், வீட்டினுள் புகுந்த மா்ம நபா் ஒருவா், அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா். இதையடுத்து அவா் சப்தமிடவே அருகிலிருந்த இளைஞா்கள் அந்த மா்மநபரை மடக்கிப் பிடித்து விக்கிரவாண்டி போலீஸாரிடம் ஒப்படைத்தனா். தொடா்ந்து, போலீஸாா் நடத்திய விசாரணையில் அந்த நபா் கள்ளக்குறிச்சி, தெற்கு மேட்டுத் தெருவைச் சோ்ந்த கு.முருகன் (54) என்பது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் முருகன் மீது பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்து, சிறையிலடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






