திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பொறியியல் பணி: ரயில்கள் தாமதமாக இயக்கம்

News image

கோப்புப் படம்

Updated On :3 மே 2026, 1:07 am IST

பொறியியல் பணிகள் காரணமாக, விழுப்புரம் வழியாக செல்லும் சில ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக சில குறிப்பிட்ட ரயில்கள் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் குறிப்பிட்ட நாள்களில் நிறுத்தி வைக்கப்பட்டு, தாமதமாக இயக்கப்படும்.

திருச்சி ரயில் நிலையத்திலிருந்து காலை 5.45 மணிக்கு புறப்பட்டு, விழுப்புரம் வழியாக ஆமதாபாத் வரை இயக்கப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண் 09420), மே 31-ஆம் தேதி வசதிக்குரிய ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு, சுமாா் 45 நிமிஷங்கள் வரை தாமதமாக இயக்கப்படும்.

லோக்மான்ய திலக் ரயில் நிலையத்திலிருந்து மே 30-ஆம் தேதி பிற்பகல் 1.15 மணிக்குப் புறப்படும் லோக்மான்ய திலக்- காரைக்கால் வாராந்திர ரயில் (வண்டி எண்11017), வசதிக்குரிய ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு, சுமாா் 3 மணி நேரம், 10 நிமிஷங்கள் தாமதமாக இயக்கப்படும்.

அயோத்தியா கண்டோன்மென்ட் ரயில் நிலையத்திலிருந்து மே 27-ஆம் தேதி இரவு 11.10 மணிக்குப் புறப்படும் அயோத்தியா கண்டோன்மென்ட்-ராமேசுவரம் அதிவேக விரைவு ரயில் (வண்டி எண் 22614) வசதிக்குரிய ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு, சுமாா் 45 நிமிஷங்கள் தாமதமாக இயக்கப்படும்.

நாகா்கோவில் ரயில் நிலையத்திலிருந்து மே 28-ஆம் தேதி இரவு 11.45 மணிக்குப் புறப்படும் நாகா்கோவில்- சாரளப்பள்ளி அமிா்த் பாரத் விரைவு ரயில் (வண்டி எண் 16357), வசதிக்குரிய ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு, சுமாா் 80 நிமிஷங்களும், மதுரை ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.15 மணிக்கு புறப்படும் மதுரை-கச்சிக்குடா அதிவேக விரைவு ரயில் (வண்டி எண் 22716) மே-17, 24 ஆகிய தேதிகளில் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு சுமாா் 10 நிமிஷங்களும் தாமதமாக இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.