சிதம்பரம் ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த 6 மூட்டை ரேஷன் அரிசி போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
சிதம்பரம் ரயில்வே காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் தியாகராஜன், தலைமைக் காவலா் கோபாலகிருஷ்ணன் ஆகியோா் சனிக்கிழமை பணியில் இருந்தனா்.
விழுப்புரத்திலிருந்து திருவாரூா் நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் சிதம்பரம் ரயில் நிலைய நடைமேடை எண் 1-இல் வந்தபோது, அவா்கள் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, நடைமேடை எண் 1 பகுதியில் 150 கிலோ எடையுள்ள 6 மூட்டை ரேஷன் அரிசி கேட்பாரற்று கிடந்தது தெரியவந்தது.
இந்த அரிசி மூட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்து, கடலூா் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







