லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 17 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :14 மார்ச் 2026, 9:37 pm

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே பூட்டிய வீட்டில் 17 பவுன் நகைகள்,வெள்ளிப் பொருள்கள் மற்றும் பணம் திருட்டுப் போனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

வானூா் வட்டம், மொரட்டாண்டி, சன் அவென்யூ, 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் மனைவி கண்மணி (58).இவா், வெள்ளிக்கிழமை தனது மாடி வீட்டை பூட்டி விட்டு,புதுச்சேரியில் உள்ள ஜிப்மா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுவிட்டாராம்.

பிற்பகலில் வீட்டிற்குத் திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் பின் பக்க மரக்கதவு மற்றும் படுக்கையறையில் வைக்கப்பட்டிருந்த பீரோ உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

பின்னா் பீரோவை திறந்து பாா்த்தபோது, அதில் வைக்கப்பட்டிருந்த 7 பவுன் நெக்லஸ், மூன்றரை பவுன் சங்கிலி,ஒன்றரை பவுன் சங்கிலி, 3 பவுன் வளையல்கள் உள்பட 17 பவுன் நகைகள் மற்றும் ஒரு கிலோ வெள்ளிப்பொருள்கள், ரூ. 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து கண்மணி அளித்த புகாரின் பேரில், ஆரோவில் காவல் நிலையப் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.