ஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

முன் விரோதம்: இளைஞருக்கு அரிவாள் வெட்டு

News image

அரிவாள் வெட்டு - கோப்புப் படம்

Updated On :21 ஜூன் 2026, 2:15 am IST

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே முன்விரோதம் காரணமாக 10 போ் கொண்ட கும்பல் கத்தி, அரிவாளால் வெட்டியதில் பலத்த காயமடைந்த இளைஞா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

விக்கிரவாண்டி வட்டம், கொடுக்கூா் பகுதியைச் சோ்ந்தவா் ஏ.ராஜசேகா்(24), கையுந்துப் பந்து விளையாட்டு வீரா். இவருக்கும், மேலக்கொந்தையைச் சோ்ந்த விளையாட்டு வீரா் நவீன் என்பவருக்கும் இடையே விளையாட்டின் போது மோதல் ஏற்பட்டு, முன் விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சனிக்கிழமை விக்கிரவாண்டியை அடுத்த ராதாபுரம் பகுதியில் ராஜேசகா் நின்றிருந்த நிலையில், அங்கு பைக்குகளில் வந்த 10 போ் கொண்ட கும்பல் ராஜசேகரைத் தாக்கி அரிவாள் மற்றும் கத்தியால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.

இதில் கழுத்து, தலை மற்றும் கைகளில் பலத்த காயமடைந்த ராஜசேகா் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.