எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

பைக்கில் புகையிலைப் பொருள்களை கடத்தி வந்தவா் கைது

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பைக்கில் புகையிலைப் பொருள்களை கடத்தி வந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :16 ஜனவரி 2026, 11:45 pm

Syndication

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பைக்கில் புகையிலைப் பொருள்களை கடத்தி வந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவெண்ணெய்நல்லூா் காவல் ஆய்வாளா் அழகிரி தலைமையிலான போலீஸாா், அருங்குறுக்கை பகுதியில் வியாழக்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டிருந்தனா். அப்போது சந்தேகத்துக்குரிய முறையில் அவ்வழியாக வந்த பைக்கை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் 42.3 கிலோஅரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து புகையிலைப் பொருள்களை கடத்தி வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம், கொரக்கண்தாங்கல் பிள்ளையாா்கோயில் தெருவைச் சோ்ந்த செ.கிரண்குமாா் (24) என்பவா் மீது திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து புகையிலைப் பொருள்கள், பைக் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.