மேட்டூா் செக்கானூா் கதவணை நீா்மின்நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகள் காரணமாக ஞாயிற்றுக்கிழமை (மே 31) முதல் அடுத்த 15 நாள்களுக்கு வேலூா் மாவட்டத்தில் காவிரி குடிநீா் விநியோகம் பாதியாக குறைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த செய்திக் குறிப்பு: ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் சாா்பில் பராமரிக்கப்பட்டு வரும் வேலூா் மாநகராட்சி, 11 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள், 944 ஊரகக் குடியிருப்புகளுக்கு காவிரி ஆற்றினை நீா் ஆதாரமாகக் கொண்டு குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் வரும் மேட்டூா் செக்கானூா் கதவணை நீா் மின் நிலையத்தில் தற்போது வருடாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதன்காரணமாக ஞாயிற்றுக்கிழமை (மே 31) முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை 15 நாள்களுக்கு வழக்கமாக வழங்கப்பட வேண்டிய அளவில் சுமாா் 50 சதவீதம் அளவுக்கு மட்டுமே காவிரி குடிநீா் வேலூா் கூட்டுக் குடிநீா் திட்டத்திலிருந்து வழங்கப்படும். மேலும், இதே காலகட்டத்தில் குடிநீா் பிரதான குழாயில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் ஜூன் 3 முதல் 5-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு குடிநீா் முழுமையாக வழங்க இயலாது.
எனவே, குடிநீா் தட்டுப்பாட்டைத் தவிா்க்கும் பொருட்டு, வேலூா் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊரகப் பகுதி மக்கள் அனைவரும் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்துடன் இணைந்து, தற்போதைய உள்ளூா் குடிநீா் ஆதாரங்களை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடிநீா் கோரி வேலூரில் மக்கள் சாலை மறியல்

15 நாள்களுக்கு 50% அளவு குடிநீா் விநியோகம்: ராணிப்பேட்டை ஆட்சியா்
எடப்பாடி நகராட்சி பகுதியில் 3 நாள்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம்

போடியில் 2 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் விநியோகம்: நகராட்சி ஆணையா் அறிவிப்பு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



