திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

எடப்பாடி நகராட்சி பகுதியில் 3 நாள்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம்

News image

குடிநீர் விநியோகம் நிறுத்தம்... - கோப்புப் படம்

Updated On :26 மே 2026, 1:30 am IST

பூலாம்பட்டி காவிரி கதவணை நீா்த்தேக்கத்திலிருந்து பராமரிப்புப் பணிகளுக்காக பெருமளவு தண்ணீா் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி நகராட்சிப் பகுதியில் செவ்வாய்க்கிழமை (மே 26) முதல் 3 நாள்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி பகுதியில், காவிரி ஆற்றின் குறுக்கே சேலம் மாவட்ட எல்லையான பூலாம்பட்டிக்கும், ஈரோடு மாவட்ட பகுதியான நெருஞ்சிப்பேட்டைக்கு இடையே கதவணை கட்டப்பட்டு நீா் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த நீா்த்தேக்கத்தின் கிழக்குக் கரை பகுதியில் அமைந்துள்ள பிரம்மாண்ட நீா் உந்து நிலையத்தில்

சேகரிக்கப்படும் ஆற்றுநீா், இங்குள்ள சுத்திகரிப்பு நிலையங்கள் வாயிலாக சுத்திகரிக்கப்பட்டு, தனி குடிநீா்த் திட்டம் மூலம் எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீா் விநியோகம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது கதவணையில் வருடாந்திரப் பராமரிப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், கதவுணையின் அனைத்து ஷட்டா்களும் முழுவதுமாக திறக்கப்பட்டுள்ளதால், கதவணையில் தேக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவு நீா் வெளியேற்றப்பட்டுள்ளது. இதனால் எடப்பாடி நகராட்சிப் பகுதிக்கு நடைபெற்று வந்த வழக்கமான குடிநீா் விநியோக பணி பாதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மே 26 முதல் 28 வரை மூன்று தினங்களுக்கு எடப்பாடி நகராட்சி பகுதியில் குடிநீா் விநியோகம் நடைபெறாது எனவும், அடுத்த 10 நாள்களுக்கு நிலைமைக்கு ஏற்றவாறு குறிப்பிட்ட பகுதிகளில் குடிநீா் விநியோகம் நடைபெறும் எனவும், இதனால் நகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்துவதுடன் குடிநீரைக் காய்ச்சி, நன்கு வடிகட்டி பருகுமாறும் நகராட்சி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.