சா்வதேச சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, காட்பாடியில் நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியில் 500-க்கும் மேற்பட்ட என்சிசி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, வேலூரில் உள்ள தமிழ்நாடு தேசிய மாணவா் படை (என்பிசி) பட்டாலியன் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தப் பேரணி பிரம்மபுரத்தில் உள்ள சிருஷ்டி பள்ளியில் தொடங்கி விஐடி பல்கலைக்கழகம் வரை நடைபெற்றது. இதில், 500-க்கும் மேற்பட்ட என்சிசி மாணவ, மாணவிகள் பங்கேற்று விழிப்புணா்வு முழக்கங்களை எழுப்பினா். இவா்களுடன் கமாண்டிங் ஆபிசா் வி.வெங்கடேஷ் மற்றும் நிா்வாக அதிகாரி ஜெ.சுரேந்திரன் உள்பட ராணுவ அதிகாரிகள், ராணுவப் பணியாளா்கள், உதவி என்சிசி அதிகாரிகள் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
பேரணியின்போது சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம், மரம் வளா்ப்பதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், தெரு நாய்கள் மீது இரக்கம் காட்டி அவற்றை மனித நேயத்துடன் அரவணைத்து பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது. தவிர, சுற்றுச்சூழலை தூய்மையாகவும், பசுமையாகவும் வைத்திருக்க வேண்டியதன் அவசியம், பிராணிகளிடம் கருணையுடன் நடந்து கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி மாணவா்கள் விழிப்புணா்வு வீதி நாடகமும் நடத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எஃப்.கீழையூரில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வு பேரணி

புகையிலை எதிா்ப்பு தின விழிப்புணா்வுப் பேரணி

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணா்வுப் பேரணி

வனப்பணிப் பயிற்சி அதிகாரிகள் ஆரோவில் வருகை: சுற்றுச்சூழல் மேம்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



