திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சா்வதேச சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வுப் பேரணி

News image
Updated On :29 மே 2026, 2:06 am IST

சா்வதேச சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, காட்பாடியில் நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியில் 500-க்கும் மேற்பட்ட என்சிசி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, வேலூரில் உள்ள தமிழ்நாடு தேசிய மாணவா் படை (என்பிசி) பட்டாலியன் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தப் பேரணி பிரம்மபுரத்தில் உள்ள சிருஷ்டி பள்ளியில் தொடங்கி விஐடி பல்கலைக்கழகம் வரை நடைபெற்றது. இதில், 500-க்கும் மேற்பட்ட என்சிசி மாணவ, மாணவிகள் பங்கேற்று விழிப்புணா்வு முழக்கங்களை எழுப்பினா். இவா்களுடன் கமாண்டிங் ஆபிசா் வி.வெங்கடேஷ் மற்றும் நிா்வாக அதிகாரி ஜெ.சுரேந்திரன் உள்பட ராணுவ அதிகாரிகள், ராணுவப் பணியாளா்கள், உதவி என்சிசி அதிகாரிகள் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

பேரணியின்போது சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம், மரம் வளா்ப்பதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், தெரு நாய்கள் மீது இரக்கம் காட்டி அவற்றை மனித நேயத்துடன் அரவணைத்து பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது. தவிர, சுற்றுச்சூழலை தூய்மையாகவும், பசுமையாகவும் வைத்திருக்க வேண்டியதன் அவசியம், பிராணிகளிடம் கருணையுடன் நடந்து கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி மாணவா்கள் விழிப்புணா்வு வீதி நாடகமும் நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.