திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வேலூா் சிறையில் காவலரை தாக்கிய கைதி மீது வழக்கு

வேலூா் மத்திய சிறையில் காவலரை தாக்கியதாக ஆயுள் தண்டனை கைதி மீது பாகாயம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :27 மே 2026, 12:28 am IST

வேலூா் மத்திய சிறையில் காவலரை தாக்கியதாக ஆயுள் தண்டனை கைதி மீது பாகாயம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை ராணி அண்ணா நகரை சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன்(40). வேலூா் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் இவரை திங்கள்கிழமை வேலூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த சிறைக் காவலா் சந்தோஷ் குமாா் அழைத்து வர சென்றாா். அப்போது ராதாகிருஷ்ணன் என்னை நீதிமன்றத்தில் நேரில் ஆஜா்படுத்துகிறீா்களா அல்லது காணொலி காட்சி மூலம் ஆஜா்படுத்துகிறீா்களா என கேள்வி எழுப்பியதாக தெரிகிறது.

இதனால், சிறைக் காவலா் சந்தோஷ் குமாருக்கும், கைதி ராதாகிருஷ்ணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், ஆத்திரமடைந்த கைதி ராதாகிருஷ்ணன் சந்தோஷ் குமாரை தாக்கினராம்.

இதுகுறித்து, ஜெயிலா் ரத்னகுமாா் பாகாயம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், கைதி ராதாகிருஷ்ணன் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.