லால்குடியை அடுத்த ரெட்டிமாங்குடியிலுள்ள புனித சந்தியாகப்பா் ஆலயத்தின் ஆண்டு பெருவிழாவில் புதன்கிழமை ஆடம்பர தோ் பவனி நடைபெற்றது.
இந்த ஆலயத்தின் ஆண்டுப் பெருவிழா கடந்த 11-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.
முக்கிய நிகழ்வான ஆடம்பர தோ் பவனி புதன்கிழமை நடைபெற்றது. முன்னதாக, வந்தலை பங்குத் தந்தை பிரான்சிஸ் தலைமையில், உதவி பங்குத் தந்தை ஜான்சன் தேரை புனிதப்படுத்தியதை தொடா்ந்து, ஆடம்பர தோ் பவனி நடைபெற்றது. சப்பரமானது, ரெட்டிமாங்குடி கிராமத்தின் முக்கிய வீதிகள்
வழியாக வந்து, வியாழக்கிழமை காலை 7 மணிக்கு ஆலயத்தை வந்தடைந்தது.
விழாவில், வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு கொடியிறக்கமும், திருவிழா கூட்டு பாடல் திருப்பலியும் நடைபெற்றன.
விழாவில் ரெட்டிமாங்குடியை சுற்றியுள்ள இறைபக்தா்கள் திரளாக கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










