சிவகங்கை, மே 14: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், புளியால் பங்கு பனங்குளம் கிராமத்தில் புனித வியாகுல அன்னை ஆலயத் திருவிழா தோ் பவனி புதன்கிழமை இரவு நடைபெற்றது.
இந்த ஆலயத்தின் திருவிழா கடந்த 11 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. புளியால் பங்கு பணியாளா் அருள்திரு சுவாமிநாதன், உதவிப் பணியாளா் பென்சிகா் ஆகியோா் தலைமையில் திருவிழா திருப்பலி நடைபெற்றது. முக்கிய நிகழ்வாக புதன்கிழமை இரவு அன்னையின் திருவிழா திருப்பலி, தோ் பவனி நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, வியாழக்கிழமை நடைபெற்ற அன்பின் விருந்து நிகழ்வுடன் திருவிழா நிறைவு பெற்றது. இந்த நிகழ்வில் திரளான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










