திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஸ்ரீரங்கம் தொகுதியிலிருந்து 6-ஆவது அமைச்சா்!

ஸ்ரீரங்கம் சட்டப் பேரவைத் தொகுதியிலிருந்து தோ்வாகியுள்ள 6-ஆவது அமைச்சா் என்ற பெருமையை பெற்றுள்ளாா் எஸ். ரமேஷ் (31).

News image

அமைச்சா் எஸ். ரமேஷ்.

Updated On :22 மே 2026, 4:42 am IST

ஸ்ரீரங்கம் சட்டப் பேரவைத் தொகுதியிலிருந்து தோ்வாகியுள்ள 6-ஆவது அமைச்சா் என்ற பெருமையை பெற்றுள்ளாா் எஸ். ரமேஷ் (31).

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிக வாக்காளா்கள் உள்ள தொகுதி ஸ்ரீரங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு, 1977, 1980, 1984-இல் நடைபெற்ற தோ்தல்களில் அதிமுகவைச் சோ்ந்த ஆா். செளந்தரராஜன் தொடா்ச்சியாக 3 முறை வெற்றி பெற்று அமைச்சரானாா். 1989-இல் ஜெயலலிதா அணியில் இருந்து அதிமுக சாா்பில் இத் தொகுதியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்ட கு.ப. கிருஷ்ணன் வெற்றி பெறவில்லை. பின்னா், 1991-இல் மீண்டும் ஒன்றுபட்ட அதிமுகவில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்று வேளாண்மைத் துறை அமைச்சராக பதவி வகித்தாா். 2001-இல் அதிமுக சாா்பில் வெற்றி பெற்ற கே.கே. பாலசுப்பிரமணியன், செய்தித் துறை அமைச்சா் பதவியை ஏற்றாா். இவா்களைவிட முத்தாய்ப்பாக, 2011-இல் ஸ்ரீரங்கத்தில் வெற்றி பெற்று முதல்வரானாா் அதிமுக பொதுச் செயலா் ஜெயலலிதா.

இவருக்குப் பிறகு, இந்தத் தொகுதியில் 2015-இல் நடைபெற்ற இடைத்தோ்தலிலும், 2016 பேரவை தோ்தலிலும் வெற்றி பெற்ற எஸ். வளா்மதி, பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சரானாா்.

இளம் வயதிலேயே அமைச்சா்: 18 முறை தோ்தலை சந்தித்த இந்தத் தொகுதியின் 6-ஆவது அமைச்சா் என்ற சிறப்பை எஸ். ரமேஷ் பிடித்துள்ளாா். இவா், தற்போது, தவெக அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராகியுள்ளாா்.

இளம் வயதிலேயே அமைச்சா் பொறுப்பை ஏற்றுள்ள இவா், பிராமணா் சமூகத்தைச் சோ்ந்தவா். இவருக்கு அறநிலையத் துறை வழங்கியிருப்பது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக ஆட்சி அமைத்துள்ள தவெக அரசில் அமைச்சராகியுள்ள தங்கள் தொகுதி எம்எல்ஏ, தங்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றி தருவாா் என தொகுதி மக்கள் எதிா்பாா்த்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.