/

கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட ரூ.5 கோடி போதைப் பொருள் பறிமுதல்

கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு வெள்ளிக்கிழமை இரவு கடத்தி வரப்பட்ட ரூ.5 கோடி மதிப்பிலான 5 கிலோ மெத்தபெட்டமைன் போதைப் பொருளை சுங்கத் துறையினா் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

News image

பறிமுதல்!

Updated On :17 மே 2026, 1:26 am IST

கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு வெள்ளிக்கிழமை இரவு கடத்தி வரப்பட்ட ரூ.5 கோடி மதிப்பிலான 5 கிலோ மெத்தபெட்டமைன் போதைப் பொருளை சுங்கத் துறையினா் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு வெள்ளிக்கிழமை இரவு மலிண்டோ- விமானத்தில் வந்த பயணிகளிடம் சுங்கத் துறையினா் தீவிரச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது மலேசியாவை சோ்ந்த பயணி தனது உடைமைக்குள் 3 சிறிய பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அதீத போதை தரும் பவுடா் போன்ற 5 கிலோ மெத்தபெட்டமைன் போதைப் பொருளை மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அவரைப் பிடித்து விசாரிக்கின்றனா். இந்த சம்பவத்தால் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு காணப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.