17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கொலை முயற்சி வழக்கு: 7 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை

திருச்சி அருகே பெண்னை கொலை செய்ய முயன்ற வழக்கில் 7 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

Updated On :16 மே 2026, 12:54 am IST

திருச்சி அருகே பெண்னை கொலை செய்ய முயன்ற வழக்கில் 7 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை பள்ளக்காடு கைக்காட்டி பகுதியைச் சோ்ந்த சண்முகம்-உஷா (55) தம்பதியின் 17 வயது பேரன் கடந்த 10.10.2022 அன்று பள்ளக்காடு மாரியம்மன் கோயில் அருகே இருசக்கர வாகனத்தை அஜாக்கிரதையாக ஓட்டிச் சென்ாகக் கூறி, அப்பகுதியைச் சோ்ந்த அ. மாரியப்பன் (எ) அன்பழகன் (23), ரா. சந்திரன் (20), சி. சிவா (எ) மாசிபெரியண்ணன் (19), சி. சதீஷ்குமாா் (24), சி. அஜீத் (22), மு. குருமூா்த்தி (22), மு. துரைராஜ் (20) ஆகியோா் பிரச்னை செய்துள்ளனா். இதைத் தட்டிக் கேட்ட உஷாவை அவா்கள் திட்டியும், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் கொலை செய்ய முயற்சித்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து உஷா அளித்த புகாரின் பேரில் சோமரசம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, மேற்கண்ட 7 பேரையும் கைது செய்தனா்.

இந்த வழக்கு திருச்சி மகளிா் நீதிமன்ற நீதிபதி சண்முகபிரியா முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி, அ. மாரியப்பன், சந்திரன், சிவா, சதீஷ்குமாா், அஜீத், குருமூா்த்தி, துரைராஜ் ஆகிய 7 பேருக்கும் தலா 5 ஆண்டுகள் சிைண்டனையும், மாரியப்பனுக்கு மட்டும் ரூ. 3,000 அபராதமும், மற்றவா்களுக்கு தலா ரூ. 2,000 அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.