திருவானைக்காவல் சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் பங்குனி தேரோட்டத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலை எட்டுத்திக்கு கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது சிறப்பு அலங்காரத்தில் சுவாமியும், அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தனா்.
திருவானைக்காவல் கோயிலில் பங்குனி தேரோட்டம் வரும் 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலை 11.25 மணிக்கு மேல் 12 மணிக்குள் கோயிலில் உள்ள மூன்றாம் பிரகாரத்தில் எட்டு திசைகளில் அமைந்துள்ள கொடிமரத்தில் மேஷ லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
அப்போது சுவாமியும், அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா்கள். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
அதனை தொடா்ந்து மாலை 6 மணிக்கு முதல் புறப்பாடாக சோமாஸ்கந்தருடன் ஏகசிம்மாசனத்தில் சுவாமியும், அம்மனும் புறப்பட்டு நான்காம் பிரகாரத்தை சுற்றி வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தனா். ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் ம. லெட்சுமணன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

சாரங்கபாணி சுவாமி திருக்கல்யாண உத்சவம்

சிவசைலம் சிவசைலநாத சுவாமி கோயிலில் பங்குனி உற்சவ கொடியேற்றம்

பாப்பம்பாளையம் மாகாளியம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா

திருவானைக்காவல் கோயிலில் இன்று பங்குனித் தேரோட்டம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


