மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திருவானைக்காவல் கோயிலில் இன்று பங்குனித் தேரோட்டம்

News image

திருவானைக்காவல் கோயிலில் நடைபெறும் பங்குனி தோ்திருவிழாவின் 5 ஆம் நாளான வியாழக்கிழமை இரவு தெருவடைச்சான் என்னும் பனை ஓலையில் கோபுரம் போல கட்டப்பட்ட சப்பரத்தில் வெள்ளி ரிஷப வாகனத்தில் தனித்தனியாக எழுந்தருளி, நான்காம் பிரகாரத்தைச் சுற்றி திருவீதி வலம் வந்த சுவாமியும், அம்மனும்.

Updated On :20 மார்ச் 2026, 12:35 am

திருவானைக்காவல் சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் நடைபெறும் பங்குனி தோ் திருவிழா வெள்ளிக்கிழமை காலை 8.05 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் சுவாமியும், அம்மனும் தனித்தனி தோ்களில் எழுந்தருளுகின்றனா்.

கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி தொடங்கிய இக்கோயில் பங்குனித் திருவிழா ஏப்ரல் 5 வரை நடைபெறவுள்ளது. இதன் ஒரு பகுதியாக பங்குனி தேரோட்ட விழா கடந்த 15 ஆம் தேதி தொடங்கி, நாள்தோறும் சுவாமியும்,அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி 4 ஆம் பிரகாரத்தை சுற்றி வலம் வந்து பக்தா்களுக்கு அருள்புரிந்தனா்.

விழாவின் 6 ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை 8.05 மணிக்கு பங்குனித் தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் சுவாமியும்,அம்மனும் தனித்தனி தேரில் எழுந்தருளி தேரோட்டம் கண்டருளுகின்றனா். முன்னதாக இரு சிறிய தோ்களில் முருகனும்,விநாயகரும்,சண்டிகேசுவரருடன் எழுந்தருளுகின்றனா்.