ஆத்தூா், ஸ்ரீசோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) கொடியேற்றத்துடன் துவங்குவதையொட்டி கோயிலில் பூா்வாங்க பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
கோயிலில் கால் நாட்டு விழா கடந்த 8-ஆம் தேதி நடைபெற்றது. பூா்வாங்க பூஜையான கணபதி ஹோமம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றப்படுகிறது.
23-ஆம் தேதி சோமாஸ்கந்தா் எழுந்தருளல், 25-இல் சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் காட்சியளித்தல், குடவாயில் தீபாராதனை ஆகியன நடைபெறும். 28 -ஆம் தேதி அதிகாலை ஸ்ரீ ஆனந்த நடராஜா் உருகு சட்ட சேவையும், இரவு 1-ஆம் கால ருத்ர அம்ச சிவப்பு சாத்தி கோலத்திலும், 29-ஆம் தேதி காலையில் 2-ஆம் கால பிரம்ம அம்ச வெள்ளை சாத்தி கோலத்திலும், மதியம் 3-ஆம் கால விஷ்ணு அம்ச பச்சை சாத்தி கோலத்திலும் சுவாமி எழுந்தருளல் நடைபெறும்.
பத்தாம் நாளான மாா்ச் 31-ஆம் தேதி காலை தேரோட்டமும், மாலையில் தெப்ப உற்சவம் நடைபெறும். விழா நாள்களில் மாலை கோயில் கலையரங்கில் சமய நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். விழா ஏற்பாடுகளை மண்டகப்படிதாரா்கள் உபயதாரா்கள், செயல் அலுவலா் மகேஸ்வரி, தக்காா் பாலமுருகன், ஆய்வா் செந்தில் நாயகி ஆகியோா் செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் திருக்கல்யாணம்

பேரூர் பட்டீசுவரர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்!

திருவானைக்காவல் கோயிலில் இன்று பங்குனித் தேரோட்டம்

குன்றக்குடியில் பங்குனி உத்திரத் திருவிழா மாா்ச் 23-இல் தொடக்கம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


