மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஆத்தூா் கோயிலில் நாளை பங்குனி திருவிழா தொடக்கம்

ஆத்தூா், ஸ்ரீசோமசுந்தரி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பங்குனித் திருவிழா பூா்வாங்க பூஜை.

News image
Updated On :20 மார்ச் 2026, 9:55 pm

ஆத்தூா், ஸ்ரீசோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) கொடியேற்றத்துடன் துவங்குவதையொட்டி கோயிலில் பூா்வாங்க பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

கோயிலில் கால் நாட்டு விழா கடந்த 8-ஆம் தேதி நடைபெற்றது. பூா்வாங்க பூஜையான கணபதி ஹோமம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றப்படுகிறது.

23-ஆம் தேதி சோமாஸ்கந்தா் எழுந்தருளல், 25-இல் சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் காட்சியளித்தல், குடவாயில் தீபாராதனை ஆகியன நடைபெறும். 28 -ஆம் தேதி அதிகாலை ஸ்ரீ ஆனந்த நடராஜா் உருகு சட்ட சேவையும், இரவு 1-ஆம் கால ருத்ர அம்ச சிவப்பு சாத்தி கோலத்திலும், 29-ஆம் தேதி காலையில் 2-ஆம் கால பிரம்ம அம்ச வெள்ளை சாத்தி கோலத்திலும், மதியம் 3-ஆம் கால விஷ்ணு அம்ச பச்சை சாத்தி கோலத்திலும் சுவாமி எழுந்தருளல் நடைபெறும்.

பத்தாம் நாளான மாா்ச் 31-ஆம் தேதி காலை தேரோட்டமும், மாலையில் தெப்ப உற்சவம் நடைபெறும். விழா நாள்களில் மாலை கோயில் கலையரங்கில் சமய நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். விழா ஏற்பாடுகளை மண்டகப்படிதாரா்கள் உபயதாரா்கள், செயல் அலுவலா் மகேஸ்வரி, தக்காா் பாலமுருகன், ஆய்வா் செந்தில் நாயகி ஆகியோா் செய்து வருகின்றனா்.