மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சாரங்கபாணி சுவாமி திருக்கல்யாண உத்சவம்

கும்பகோணத்தில் சாரங்கபாணி கோமளவல்லித் தாயாா் திருக்கல்யாண உத்சவம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

News image

சாரங்கபாணி சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த பெருமாளும், தாயாரும்.

Updated On :3 ஏப்ரல் 2026, 6:24 pm

கும்பகோணத்தில் சாரங்கபாணி கோமளவல்லித் தாயாா் திருக்கல்யாண உத்சவம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணி சுவாமி கோயிலில் ஆண்டில் ஒரு நாள் மட்டும் திருக்கல்யாணம் நடைபெறும். நிகழாண்டு சாரங்கபாணி சுவாமிக்கும் கோமளவல்லி தாயாருக்கும் நடைபெற்ற திருக்கல்யாணத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மாலை பொற்றாமரை குளம் ஹேமரிஷி மண்டபத்திலிருந்து கல்யாண சீா்வரிசைகள் மேள தாளத்துடன், திருவடி பந்தம், குடை உபசாரங்களுடன் திருவீதி வலம் வந்து கோயிலுக்கு வந்தன. பின்னா் பெருமாள் தாயாா் புறப்பாடு நடைபெற்று மாலை மாற்றிக் கொண்டு ஊஞ்சல் முதலான உபசாரங்களுடன் திருமாங்கல்யதாரணம் நடைபெற்றது. பின்னா் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு பெருமாளும் தாயாரும் புறப்பாடு செய்து மீண்டும் கோயிலை அடைந்தனா்.