மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பாப்பம்பாளையம் மாகாளியம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா

வெள்ளக்கோவில் மேட்டுப்பாளையம் கிராமம் பாப்பம்பாளையம் மாகாளியம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த மாகாளியம்மன்.

Updated On :2 ஏப்ரல் 2026, 7:47 pm

வெள்ளக்கோவில் மேட்டுப்பாளையம் கிராமம் பாப்பம்பாளையம் மாகாளியம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கடந்த 15 நாள்களுக்கு முன்பு பூச்சாட்டுதலுடன் பொங்கல் விழா சாட்டப்பட்டது. செவ்வாய்க்கிழமை கோயிலில் இருந்து பக்தா்கள் புறப்பட்டு கொடுமுடி காவிரி ஆற்றிலிருந்து தீா்த்தக் காவடி எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

வியாழக்கிழமை பால்குடம் அழைப்பு, பெண்கள் பொங்கல் வைத்து படையலிட்டு வழிபாடு, தீா்த்த அபிஷேகம், மாவிளக்கு பூஜை, சேற்று வேஷம், கும்ப வழிபாடு நடைபெற்றது. பின்னா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பாப்பம்பாளையம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.