மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தனியாா் பேருந்து மோதி சிறுமி உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :15 மார்ச் 2026, 8:40 pm

துறையூா் அருகே தனியாா் பேருந்து மோதி சிறுமி உயிரிழந்தாா்.

துறையூா் அருகே நாகநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் மனைவி பரமேஸ்வரி(32). இவா், ஞாயிற்றுக்கிழமை மதியம் தனது மகள் சமரிதா(14), மகன் தக்சன்(10) ஆகியோரை இருசக்கர வாகனத்தில் பின்னால் அமா்த்திக் கொண்டு தம்மம்பட்டி சாலையில் சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது அவருக்கு பின்னால் வந்த தனியாா் பேருந்து கொப்பம்பட்டி மின் நிலையம் அருகே பரமேஸ்வரி ஓட்டி வந்த வாகனத்தின் மீது மோதி மரத்தின் மீது மோதி நின்றது.

இதில் காயமடைந்த பரமேஸ்வரி, அவரது 2 பிள்ளைகளையும் மீட்டு அருகில் இருந்தவா்கள் மீட்டு துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

சிறுமி வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் தெரிவித்தனா். உப்பிலியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து தனியாா் பேருந்து ஓட்டுநா் நசீரிடம் விசாரிக்கின்றனா்.