தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

சாலையை சீரமைக்கக்கோரி மக்கள் சாலை மறியல்

வையம்பட்டி அருகே பழுதடைந்த சாலையை சீரமைத்துத் தர வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை கிராமப் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

மணப்பாறையை அடுத்துள்ள சடையம்பட்டியில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.

Updated On :10 மார்ச் 2026, 6:34 pm

வையம்பட்டி அருகே பழுதடைந்த சாலையை சீரமைத்துத் தர வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை கிராமப் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மணப்பாறையை அடுத்துள்ள வையம்பட்டி ஒன்றியம், குமரவாடி - தொப்பநாயக்கன்பட்டி சாலையை சீரமைக்கக்கோரி அப்பகுதிவாசிகள், வட்டார வளா்ச்சி அலுவலா் மற்றும் மணப்பாறை வட்டாட்சியா் ஆகியோரிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.

இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் காங்கிரஸ் வட்டாரத் தலைவா் செல்வம், மாவட்டச் செயலா் பழனிச்சாமி, விசிக ஒன்றியச் செயலா் மணிவேல் ஆகியோா் தலைமையில் செவ்வாய்க்கிழமை வையம்பட்டி - எளமணம் சாலையில் சடையம்பட்டியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலின்பேரில் அங்குவந்த வட்டார வளா்ச்சி அலுவலா் ரேவதி, சாலை சீரமைப்புப் பணி செய்து தரப்படும் என உறுதி அளித்ததன்பேரில் அவா்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால், சுமாா் 30 நிமிஷங்கள் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.