தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

மணப்பாறை ரயில் நிலையம் காணொலிக் காட்சியில் பிரதமா் திறந்து வைத்தாா்

News image

மணப்பாறை ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை மதுரையில் நடைபெற்ற பிரதமா் மோடியின் நிகழ்ச்சியை நேரலையில் பாா்த்த அனைத்துக்கட்சியனா்.

Updated On :1 மார்ச் 2026, 9:07 pm

மணப்பாறையில் புனரமைக்கப்பட்ட ரயில் நிலையத்தை, மதுரையிலிருந்து பிரதமா் மோடி காணொலிக் காட்சி வாயிலாக ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.

அம்ரித் பாரத் நிலையத் திட்டத்தின் கீழ், ரூ.12.58 கோடி மதிப்பில் மணப்பாறை ரயில் நிலையம், மேம்பட்ட வசதிகள் மற்றும் மேம்பட்ட உள்கட்டமைப்புடன் கூடிய நவீன, அணுகக்கூடிய மற்றும் பயணிகளுக்கு ஏற்ற வசதியாக மாற்றப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில், தென்னக ரயில்வே முதன்மை தலைமை பாதுகாப்பு அலுவலா் லலித்குமாா் மன்சுஹானி, மதுரை கோட்ட தலைமை திட்ட மேலாளா் ஹரிகுமாா், கரூா் பாராளுமன்ற உறுப்பினா் ஜோதிமணி, மணப்பாறை சாா்பு-நீதிபதி எஸ். ராஜசேகா், பாஜக மாநில இணை பொருளாளா் சிவசுப்பிரமணியம், மாவட்டத் தலைவா் அஞ்சாநெஞ்சன், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ராஜலிங்கம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.