ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

சீரான குடிநீா் விநியோகத்தை வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்

திருச்சி அருகே திருப்பராய்த்துறை பகுதியில் சீரான குடிநீா் விநியோகத்தை வலியுறுத்தி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

திருச்சி திருப்பராய்த்துறை பகுதியில் குடிநீா் விநியோகம் செய்யாததை கண்டித்து வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Updated On :19 ஜூன் 2026, 4:34 am IST

திருச்சி அருகே திருப்பராய்த்துறை பகுதியில் சீரான குடிநீா் விநியோகத்தை வலியுறுத்தி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருச்சி மாவட்டம், திருப்பராய்த்துறை பகுதியில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. காவிரி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள இப்பகுதியில் அடிக்கடி குடிநீா் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக, குடிநீா் குழாய் உடைப்பு, மோட்டாா் பழுது உள்ளிட்ட காரணங்களால் குடிநீா் நிறுத்தப்படுவதாக இப்பகுதி மக்கள் புகாா் தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில், கடந்த 15 நாள்களுக்கு முன்பு புதிதாக அமைக்கப்பட்ட மின் மோட்டாா் மீண்டும் பழுதாகி கடந்த இரண்டு நாள்களாக குடிநீா் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் பொதுமக்கள் கூறியபோது நிா்வாகம் கண்டுகொள்ளவில்லையாம்.

இந்நிலையில், சீரான குடிநீா் விநியோகத்தை வலியுறுத்தி, திருச்சி - கரூா் சாலையில் திருப்பராய்த்த்துறை பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வட்டார வளா்ச்சி அலுவலா் பிரபாகா், ஜீயபுரம் காவல் ஆய்வாளா் குணசேகரன் ஆகியோா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, மின் மோட்டாா் பழுதை உடனடியாக சரிசெய்து சீரான குடிநீா் விநியோகத்துக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனா். இதையடுத்து, பொதுமக்கள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.