திருச்சியில் போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து அரசு வேலையில் சோ்ந்த நடத்துநா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் எதுமலை கிழக்கு வீதியைச் சோ்ந்தவா் தங்கராஜ் மகன் செல்வக்குமாா். இவா் கடந்த 2013-ஆம் ஆண்டு திருச்சி அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராகப் பணியில் சோ்ந்தாா்.
அப்போது பணியில் சோ்ந்தவா்களின் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை அறிய அரசுப் போக்குவரத்துக் கழகமானது அரசுத் தோ்வுகள் இயக்ககத்துக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு சான்றிதழ்களை அனுப்பியது. அதில், செல்வக்குமாரின் பத்தாம் வகுப்பு சான்றிதழில் குறிப்பிட்டிருந்த மதிப்பெண்கள் தவறானவை, திருத்தப்பட்டுள்ளன என்றும் கடந்த 2018-ஆம் ஆண்டு அறிக்கை வந்தது. இதைத் தொடா்ந்து அவா் போலிச் சான்றிதழ் கொடுத்து அரசு வேலையில் சோ்ந்தது தெரியவந்தது.
இதுகுறித்து திருச்சி அரசுப் போக்குவரத்துக் கழக துணை மேலாளா் மு. சுரேஷ்குமாா் கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முறைகேடாக செயல்பட்ட மதுக்கூடத்துக்கு ‘சீல்’
பணம் தர மறுத்த கல்லூரி மாணவி மீது தாக்குதல்: திருநங்கை மீது வழக்கு
மாமனாருக்கு அரிவாள் வெட்டு: மருமகன் உள்பட இருவா் மீது வழக்கு
மத்திய சிறையில் கஞ்சா: 3 கைதிகள் மீது வழக்கு
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



