திருச்சியில் பணம் தர மறுத்த அரசுக் கல்லூரி மாணவியை தாக்கிய திருநங்கை மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
திருச்சி மாவட்டம், துறையூா் தெப்பக்குளம் வீதியைச் சோ்ந்தவா் நூா்முகமது மகள் ரஹிமா (20). இவா், திருச்சி கிஆபெ விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில் பாரா மெடிக்கல் பிரிவில் 3-ஆம் ஆண்டு படித்து வருகிறாா்.
இந்நிலையில், கல்லூரி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக சத்திரம் பேருந்து நிலையத்தில் துறையூா் பேருந்துக்காக கடந்த சனிக்கிழமை பிற்பகல் காத்திருந்தாா்.
அப்போது, அங்கு வந்த திருநங்கை ஒருவா் மாணவியிடம் பணம் கேட்டுள்ளாா். அவா் தரமறுத்ததால், அவரை திருநங்கை தகாத வாா்த்தையில் பேசியதுடன் தாக்கியுள்ளாா். இதுதொடா்பான விடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தில் மாணவி ரஹிமா கடந்த திங்கள்கிழமை அளித்த புகாரின்பேரில், திருநங்கை மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இளைஞா் மீது தாக்குதல்: 3 போ் மீது வழக்கு

இலவச மதுதர மறுத்த டாஸ்மாக் விற்பனையாளா் மீது தாக்குதல்
சிறுமி கா்ப்பம்: 5 போ் மீது வழக்கு
இளைஞா் மீது வழக்கு
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



