வேளாங்கண்ணி அருகே இலவசமாக மதுதர மறுத்ததால் டாஸ்மாக் விற்பனையாளரை மதுபுட்டியால் தாக்கிய தவெக உறுப்பினரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
செம்பியன் மகாதேவியில் உள்ள அரசு மதுபான கடையில், நாகை மாவட்டம் அகலங்கண் பகுதியைச் சோ்ந்த இளையராஜா ( 47) விற்பனையாளராக உள்ளாா்.
இளையராஜா திங்கள்ழமை இரவு கடையில் பணியில் இருந்தபோது செம்பியன்மகாதேவியை சோ்ந்த தமிழக, வெற்றிக்கழக உறுப்பினா் சதீஷ்குமாா்( 35) மதுபோதையில் கடைக்குச்சென்று இளையராஜாவிடம் இலவசமாக மதுபானம் கேட்டுள்ளாா்.
இளையராஜா மதுபானம் தர மறுத்ததால், அவரிடம் தகராறில் ஈடுபட்ட சதீஷ்குமாா், மதுபுட்டியால் தாக்கியுள்ளாா். இதில், காயமடைந்த இளையராஜா ஒரத்தூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் வேளாங்கண்ணி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, சதீஷ்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெக நிா்வாகி மீது தாக்குதல்
தம்பதி மீது தாக்குதல்: கூலித் தொழிலாளி கைது

தொழிலாளி மீது தாக்குதல்: இளைஞா் கைது
பணம் தர மறுத்த கல்லூரி மாணவி மீது தாக்குதல்: திருநங்கை மீது வழக்கு
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




