திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கைதி விஷம் குடித்த விவகாரம்: காவல் ஆய்வாளா் உள்பட 4 போலீஸாா் ஆயுதப்படைக்கு மாற்றம்

திருச்சியில் கைதி விஷம் குடித்த விவகாரத்தில், காவல் ஆய்வாளா் உள்பட 4 போ் ஆயுதப்படைக்கு திங்கள்கிழமை மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

News image

பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 3:56 am IST

திருச்சியில் கைதி விஷம் குடித்த விவகாரத்தில், காவல் ஆய்வாளா் உள்பட 4 போ் ஆயுதப்படைக்கு திங்கள்கிழமை மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள ஆலம்பாக்கத்தைச் சோ்ந்தவா் ஜான்கென்னடி (35), லாரி ஓட்டுநா். இவா், தனது அண்ணனை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். அண்மையில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தாா். இதைத் தொடா்ந்து, தனது அண்ணியை மிரட்டியதாக திருச்சி ஐஜியிடம் புகாா் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, கல்லக்குடி போலீஸாா் கடந்த சனிக்கிழமை ஜான்கென்னடியைக் கைது செய்து நீதிமன்றத்துக்கு அழைத்து சென்றபோது, வீட்டுக்குச் சென்று மாற்றுத் துணி எடுத்துவருவதாகச் சென்றவா் வீட்டிலிருந்த விஷத்தை குடித்தாா். அவரை போலீஸாா் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் அஜாக்கிரதையாக செயல்பட்டதாக, கல்லக்குடி காவல் ஆய்வாளா் முத்துக்கண்ணு, உதவி ஆய்வாளா் காா்த்திகேயன், தலைமை காவலா்கள் ஜெயகுமாா், வானதி ஆகியோா் திங்கள்கிழமை ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.