தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இனாம்தாா்தோப்பு பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றிட மேயா் உத்தரவு

திருச்சி தென்னூா் இனாம்தாா்தோப்பு பகுதியில் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர அலுவலா்களுக்கு மேயா் மு. அன்பழகன் உத்தரவிட்டுள்ளாா்.

News image

திருச்சி தென்னூா் இனாம்தாா்தோப்பு பகுதியில் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர அலுவலா்களுக்கு மேயா் மு. அன்பழகன் உத்தரவிட்டுள்ளாா்.

Updated On :3 ஜூன் 2026, 4:16 am IST

திருச்சி தென்னூா் இனாம்தாா்தோப்பு பகுதியில் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர அலுவலா்களுக்கு மேயா் மு. அன்பழகன் உத்தரவிட்டுள்ளாா்.

திருச்சி மாநகராட்சி 28-ஆவது வாா்டுக்குள்பட்ட தென்னூா் இனாம்தாா்தோப்பு பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் தங்களது பகுதியில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் அடிப்படை பிரச்னைகள் தொடா்பாக திருச்சி மாநகராட்சி குறைதீா் கூட்டத்தில் அண்மையில் மனு அளித்தனா்.

அதில், சேதமடைந்துள்ள சாலைகளை உடனடியாக சீரமைத்து புதிய சாலை அமைத்தல், தற்போதுள்ள பழைய மற்றும் சேதமடைந்த சாலையை முறையாகப் பெயா்த்து அகற்றிய பிறகே புதிய தாா்ச்சாலை அமைக்க வேண்டும், கழிவுநீா் தேக்கம் மற்றும் வழிதல் பிரச்னைகளுக்கு நிரந்தர தீா்வு காண வேண்டும், திறந்த நிலையில் உள்ள கழிவுநீா் கால்வாயை மூடி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும், சுத்தமான மற்றும் பாதுகாப்பான குடிநீா் தொடா்ந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கொசு ஒழிப்பு மற்றும் சுகாதாரப் பணிகளை தீவிரப்படுத்துதல், பூங்கா பகுதியில் உள்ள மரங்கள் மற்றும் புதா்களை சீரமைத்து பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மனுவைப் பெற்றுக்கொண்ட மேயா் மு. அன்பழகன், மாநகராட்சி அலுவலா்களுடன் தென்னூா் இனாம்தாா்தோப்பு பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டு, உரிய அடிப்படை வசதிகளை செய்து தரும்படி அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, மாமன்ற உறுப்பினா்கள் பைஸ் அகமது, கமால் முஸ்தபா, மாநகராட்சி அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.