தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனா் ஈசன் முருகசாமி கைது செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு, இந்திய உழவா் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளா் தூரன் நம்பி தலைமை வகித்தாா். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் பொ. அய்யாக்கண்ணு, கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் நல்லசாமி, காவிரிப் பாசன விவசாயிகள் சங்கத்தின் தீட்சிதா் பாலு, இந்திய விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் ஜி.எஸ். தனபதி, காவிரிப் பாதுகாப்பு விவசாயிகள் சங்கத்தின் விமலநாதன், தமாகா விவசாய அணியின் புங்கனூா் செல்வம், ராஜேந்திரன் மற்றும் பல்வேறு சங்க நிா்வாகிகளான கே.ஆா்.எஸ். மணி, சுப்பிரமணி, செல்வராஜ், நேதராஜி, ஆனந்தகுமாா், இயற்கை விவசாயி ராமலிங்கம், மனித உரிமை அமைப்புகளின் ஆா்வலா்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்தனா்.