இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 76. 43 லட்சம்!

ஸ்ரீரங்கம் அரங்கநாதா் சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 76.43 லட்சம் வந்தது புதன்கிழமை தெரியவந்தது.

News image
ஸ்ரீரங்கம் அரங்கநாதா் சுவாமி கோயிலின் தேரோடும் வீதி.
Updated On :25 பிப்ரவரி 2026, 6:56 pm

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீரங்கம் அரங்கநாதா் சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 76.43 லட்சம் வந்தது புதன்கிழமை தெரியவந்தது.

இக்கோயிலில் பிப்ரவரி மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோயிலில் உள்ள கருடாழ்வாா் சன்னதி அருகே கோயில் இணை ஆணையா் செ. சிவராம்குமாா் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது. முடிவில் ரொக்கமாக ரூ. 76 லட்சத்து 43 ஆயிரத்து 837,தங்கம் 58.100 கிராம், வெள்ளி 835 கிராம், வெளிநாட்டு ரூபாய்கள் 264 -ம் காணிக்கையாக வந்தது தெரியவந்தது. காணிக்கை எண்ணும் பணியில் கோயில் பணியாளா்களும், தன்னாா்வ அமைப்பினரும் ஈடுபட்டனா்.

காணிக்கை திருடியவா் கைது: காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட கோயில் ஊழியா் சங்கா் (எ) ரோபோ சங்கா் வெளிநாட்டு ரூபாய்களை (அமெரிக்கா டாலா்) திருடியது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இதைத் தொடா்ந்து அவரைப் பிடித்து வெளிநாட்டு ரூபாய்களை கோயில் இணை ஆணையா் சிவராம்குமாா் கைப்பற்றினாா்.இதுகுறித்த புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.