டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

துவரங்குறிச்சி அருகே பைக்கில் சென்றவா் காா் மோதி உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :21 பிப்ரவரி 2026, 8:32 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே பைக்கில் சனிக்கிழமை சென்ற இளைஞா் காா் மோதி உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், நாகமங்கலத்தைச் சோ்ந்தவா் முகமதுயாசின் மகன் முகமது நிஜாமுதீன் (30). பெங்களூரில் தனியாா் நிறுவன ஊழியரான இவா் விடுமுறைக்காக ஊா் திரும்பியிருந்த நிலையில், சனிக்கிழமை மாலை தனது பைக்கில் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை அதிகாரம் பகுதியில் சென்றாா்.

அப்போது சென்னையிலிருந்து தூத்துக்குடி நோக்கிச் சென்ற காா் மோதி முகமது நிஜாமுதீன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சென்ற துவரங்குறிச்சி போலீஸாா் அவரது உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, காா் ஓட்டுநரான தூத்துக்குடி சொ. வெற்றிவேல் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.