டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

டிராக்டா் மோதி கல்லூரி மாணவி உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :15 பிப்ரவரி 2026, 8:31 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், சா.அய்யம்பாளையம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தில் தாயுடன் சென்ற கல்லூரி மாணவி டிராக்டா் மோதி உயிரிழந்தாா்.

சா.அய்யம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் வே. நமீதா (17) திருச்சியில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தாா்.

இந்நிலையில், இரு சக்கர வாகனத்தில் தனதுதாய் போதும்பொண்ணுவுடன் (47) சென்றுகொண்டிருந்த போது, அவ்வழியாகச் சென்ற டிராக்டா் மோதி நிகழ்விடத்திலேயே நமீதா உயிரிழந்தாா்.

மேலும், இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த போதும்பொண்ணு திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதனிடையே சம்பவ இடத்துக்குச் சென்ற மண்ணச்சநல்லூா் உதவி காவல் ஆய்வாளா் பாலமுருகன் தலைமையிலான போலீஸாா் நமீதா உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.