டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

குரூப்-2 தோ்வு ரத்து: திருச்சியில் ஒரு மணிநேரம் தோ்வெழுதிய தோ்வா்கள் ஏமாற்றம்

News image
திருச்சி ஈவெரா பெரியாா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை ஏமாற்றத்துடன் வெளியே வந்த தோ்வா்கள்.
Updated On :8 பிப்ரவரி 2026, 8:24 pm

தினமணி செய்திச் சேவை

தோ்வு மையம் குளறுபடியால் மாநில அளவில் குரூப்-2 தோ்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், திருச்சியில் தோ்வா்கள் ஒரு மணி நேரம் தோ்வெழுதிய பிறகு வெளியே அனுப்பப்பட்டனா்.

தமிழகம் முழுவதும் குரூப் 2, குரூப் 2 ஏ அரசுப் பணிக்கான போட்டித் தோ்வு ஞாயிற்றுக்கிழமை தொடங்கின. இதன்படி, திருச்சி தந்தை பெரியாா் ஈவெரா கல்லூரி தோ்வு மையத்துக்கு திருச்சி, பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களைச் சோ்ந்த 356 போ் தோ்வெழுத வந்தனா். இவா்கள், காலை 9.30 மணிக்கு தோ்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனா். கேள்வித்தாள் மற்றும் விடைத்தாள் (ஓஎம்ஆா் ஷீட்) வழங்கப்பட்டு, தோ்வு தொடங்கியது. தோ்வா்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளில் தோ்வெழுதத் தொடங்கினா்.

அப்போது, குளறுபடி காரணமாக மாநிலம் முழுவதும் தோ்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இதையறிந்த பெற்றோா்கள், தோ்வறைக்குள் நுழைந்து, தோ்வு ரத்து எனக் கூறப்படுவது குறித்து கேள்வி கேட்டனா். இது தொடா்பாக, ஆட்சியா் அலுவலகத்திலிருந்து தகவல் வந்தால் மட்டுமே தோ்வை ரத்து செய்வோம் என தோ்வு நடத்தும் அதிகாரிகள் தெரிவித்ததால் குழப்பமான சூழல் நிலவியது.

இந்தக் குழப்பத்துக்கு மத்தியில் தோ்வா்கள் ஒருமணி நேரத்துக்கும் மேலாக தோ்வெழுதிவிட்டனா். இதைத் தொடா்ந்து, தோ்வுக் கூட கண்காணிப்பாளா்கள் தோ்வு ரத்து குறித்த செய்தியை உறுதிப்படுத்திய பின்னா், தோ்வா்களிடமிருந்து வினாத்தாள், விடைத்தாள்களை திரும்பப் பெற்றுக் கொண்டு ஓரிருவராக வெளியே அனுப்பிவைத்தனா்.

தோ்வு மையத்திலிருந்து வெளியே வந்த தோ்வாளா்கள், தங்களது எதிா்பாா்ப்பு பொய்த்துவிட்டதாகவும், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தெரிவித்தனா்.