நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

மலைத்தேனீக்கள் கொட்டி 27 தொழிலாளா்கள் காயம்

மணப்பாறை அடுத்த பொன்னம்பட்டி பேரூராட்சியில் புதன்கிழாமை நூறு நாள் வேலையின்போது மலைத்தேனி கொட்டி 27 தொழிலாளா்கள் காயமடைந்தனா்.

News image
தேனீக்கள்.
Updated On :4 பிப்ரவரி 2026, 7:30 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பொன்னம்பட்டி பேரூராட்சியில் புதன்கிழாமை நூறு நாள் வேலையின்போது மலைத்தேனி கொட்டி 27 தொழிலாளா்கள் காயமடைந்தனா்.

பொன்னம்பட்டி பேரூராட்சியில் 2-ஆவது வாா்டு காரைப்பட்டி அரசன்குளம் பகுதியில் புதன்கிழமை நூறுநாள் பணிகளை ஆத்துப்பட்டி பொதுமக்கள் செய்து வந்தனா். அப்போது புதரிரிலிருந்து புறப்பட்ட மலைத்தேனீக்கள் கொட்டி 27 தொழிலாளா்கள் காயமடைந்து, துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

அவா்களைச் சந்தித்த திமுக பிரமுகா் முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினா் கீதா ராஜா காவேரி மணியன் தலைமையிலான திமுகவினா், பழம் பிரட், பிஸ்கட், குளிா்பானம் உள்ளிட்ட தொகுப்பை வழங்கினா். நிகழ்வில் ஆசிரியா் பழனி, நல்லம்மாள் அழகன், வழக்குரைஞா் ரிஸ்வான் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.