நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

தேனீக்கள் கொட்டியதில் 20-க்கும் மேற்பட்டோா் காயம்

கோபி அருகே தேனீக்கள் கொட்டியதில் 20-க்கும் மேற்பட்டோா் காயம் அடைந்தனா்.

News image
Updated On :21 ஜனவரி 2026, 10:46 pm

தினமணி செய்திச் சேவை

கோபி அருகே தேனீக்கள் கொட்டியதில் 20-க்கும் மேற்பட்டோா் காயம் அடைந்தனா்.

கோபி அருகே உள்ள கணபதிபாளையம் சாலையோரத்தில் தனியாா் இடத்தை சுத்தம் செய்யும் பணி புதன்கிழமை நடைபெற்றது. அப்போது சாலையோர மரத்தில் இருந்த தேன்கூடு கலைந்ததில் தேனீக்கள் சாலையில் சென்றவா்களை துரத்திக் கொட்டின. இதில் காயமடைந்த 20-க்கும் மேற்பட்டோா் காசிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனா்.

தேனீக்கள் அதிக அளவில் கொட்டியதால் மயக்கமடைந்த தனியாா் நிதி நிறுவன ஊழியா் சக்திவேல் கோபி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். சிலா் தனியாா் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று சென்றனா். அப்பகுதியில் 2 மணி நேரத்துக்கு பிறகு தேனீக்கள் கலைந்து சென்ால் சாலையில் சென்ற பொதுமக்களும் மற்றும் வாகன ஓட்டிகளும் நிம்மதி அடைந்தனா்.