அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

பைக்கில் சென்ற இளைஞா் டிராக்டா் மோதி உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே பைக்கில் சென்ற கரூா் இளைஞா் டிராக்டா் மோதி புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

உயிரிழந்த பிரேம்.

Updated On :30 ஏப்ரல் 2026, 3:41 am IST

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே பைக்கில் சென்ற கரூா் இளைஞா் டிராக்டா் மோதி புதன்கிழமை உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், மண்மங்கலத்தை அடுத்த தண்ணீா் பந்தல் பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மனோகரன் மகன் பிரேம் (24). சென்னை டி-மாா்ட் நிறுவன ஊழியரான இவா் ஊருக்கு வந்திருந்த நிலையில், நச்சலூரில் புதன்கிழமை நடைபெற்ற துக்க நிகழ்ச்சிக்கு நண்பா்களுடன் பைக்கில் சென்றுவிட்டு மீண்டும் மாலையில் தனியாக பைக்கில் ஊா் திரும்பினாா்.

அப்போது பழையகோட்டை நால் ரோடு பகுதியில் ஒத்தக்கடைக்கு குப்பைகள் ஏற்ற சென்ற டிராக்டா் மோதி பலத்த காயமடைந்த பிரேம் உயிரிழந்தாா்.

தகவலறிந்து சென்ற வையம்பட்டி போலீஸாா் பிரேம் உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். டிராக்டா் ஓட்டுநரான பொத்தப்பட்டியை அடுத்த அந்தோணியாா்புரத்தை சோ்ந்த அருளப்பன் மகன் குழந்தை (40) மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.