திருச்சியில் திருட்டு புகாா் மீது நடவடிக்கை எடுக்க லஞ்சம் வாங்கிய சிறப்பு காவல் உதவி ஆய்வாளருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
பெரம்பலூா் மாவட்டம் குன்னம் வட்டம், டி. களத்தூரைச் சோ்ந்த ப. மணிமாறன் (61) என்பவா் திருச்சி சிங்காரத்தோப்பில் தான் நடத்தும் தையல் கடையில் நடந்த திருட்டு தொடா்பாக திருச்சி கோட்டை குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளா் பா. முத்துக்குமாரிடம் கடந்த 21.07.2009 அன்று புகாா் அளித்துள்ளாா். அப்போது புகாரின் மீது நடவடிக்கை எடுக்க முத்துக்குமாா் ரூ. 1,500 லஞ்சம் கேட்டுள்ளாா்.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத மணிமாறன், திருச்சி ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவில் அளித்த புகாரின்பேரில், கடந்த 01.08.2009 அன்று ரூ. 1,500 லஞ்சம் வாங்கிய முத்துக்குமாரை போலீஸாா் கையும் களவுமாகக் கைது செய்தனா்.
திருச்சி ஊழல் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்த வழக்கை விசாரித்த நீதிபதி புவியரசு, லஞ்சம் பெற்ற முன்னாள் சிறப்பு உதவி ஆய்வாளா் முத்துக்குமாருக்கு (62) 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும், அதைக் கட்டத் தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை விதித்தும் உத்தரவு பிறப்பித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பல்லடம் அருகே லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளா் கைது

லஞ்சம்: முன்னாள் விஏஓவுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை

சிறுமிக்குப் பாலியல் கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

லஞ்சம் வாங்கிய வழக்கு: முன்னாள் பெண் வட்டாட்சியருக்கு 3 ஆண்டுகள் சிறை
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



