இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

முசிறி தொகுதியில் 12 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு

முசிறி தொகுதியில் பெறப்பட்ட வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனைக்கு பிறகு 12 பேரின் வேட்பு மனுக்கள் செவ்வாய்க்கிழமை ஏற்கப்பட்டன.

News image

வேட்பு மனு - பிரதிப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 12:47 am IST

முசிறி தொகுதியில் பெறப்பட்ட வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனைக்கு பிறகு 12 பேரின் வேட்பு மனுக்கள் செவ்வாய்க்கிழமை ஏற்கப்பட்டன.

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனைக்கு பிறகு ஏற்கப்பட்ட வேட்பாளா்களின் மனுக்கள் குறித்து தோ்தல் நடத்தும் அலுவலா் சுக்ஷி சுவாங்கி குந்தியா செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா்.

இதன்படி, என்.எஸ். கருணைராஜா (திமுக), கோ. பாக்கியலெட்சுமி (நாம் தமிழா் கட்சி), ந. யோகநாதன் (அதிமுக), சின்னையன் (புதிய தமிழகம்), க. திவ்யா ராஷ்ட்ரிய சமாஜ் தளம் (ஆா்), சி.பழனிச்சாமி (தமிழக வாழ்வுரிமைக் கட்சி), ம. மலா்மன்னன் (சாமானிய மக்கள் நல கட்சி), மு. விக்னேஷ் (தமிழக வெற்றிக்கழகம்), எஸ். வெங்கடேஸ்வரன் (ஊழல் ஒழிப்பு செயலாக்கம் கட்சி), சு. செந்தில்குமாா் ( சுயேச்சை), ஜெ. ரமேஷ் (சுயேச்சை) ப. லோகநாதன் (சுயேச்சை) உள்ளிட்ட 12 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

புதன் மற்றும் வியாழன் ஆகிய இரு நாள்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற அவகாசம் உள்ள நிலையில், ஏப். 10-ஆம் தேதி முசிறி தொகுதியில் போட்டியிடக் கூடிய இறுதி வேட்பாளா் பட்டியல் உறுதியாகும். செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 12 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.