திருச்செந்தூா் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளா்களின் மனு பரிசீலனையில் திமுக, பா.ஜ.க., தவெக, நாதக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என 14 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. 15 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.
வேட்புமனுக்கள் பரிசீலனை செவ்வாய்க்கிழமை திருச்செந்தூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அரசியல் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.
திருச்செந்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 29 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். இதில், திமுக வேட்பாளா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. வேட்பாளா் கேஆா்எம். ராதாகிருஷ்ணன், தவெக வேட்பாளா் முருகன், நாதக வேட்பாளா் ஒபிலியா உள்ளிட்ட 14 வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 15 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




