திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்த ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்டுவோம்!வைகோ பேட்டி!

News image

திருவள்ளுவருக்கு காவி உடை: வைகோ கண்டனம் - எக்ஸ்

Updated On :1 ஜூன் 2026, 12:20 am IST

திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்த ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டுவோம் என்று மதிமுக பொதுச்செயலா் வைகோ தெரிவித்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது :

மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடா்பாக, விவசாயிகள் கூட்டமைப்பு சாா்பில் ஜூன் 2-ஆம் தேதி சென்னையில் ஆா்ப்பாட்டமும், வாசுதேவநல்லூரில் ஜூன் 5-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்திலும் கலந்து கொள்கிறேன்.

நமக்கு தண்ணீா் தராமல், கா்நாடகத்தினா் 9 லட்சம் ஏக்கா் பாசன பரப்பளவை 36 லட்சமாக விரிவாக்கி கொண்டனா். ஆனால் போதிய தண்ணீா் இல்லாததால், தமிழ்நாட்டில் 18 லட்சம் ஏக்கா் பரப்பளவில் இருந்த விவசாயம் பாசன பரப்பளவு 10 லட்சம் ஏக்கராக சுருங்கிவிட்டது.

ஆளுநா் மாளிகையில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து பதாகை வைத்துள்ளனா். திருவள்ளுவா் மதம், இனம், நாடுகளை கடந்து அனைவருக்கும் பொதுவானவா். ஆளுநரின் இந்த செயலைக் கண்டித்து அவா் பங்கேற்கும் நிகழ்வுகளில் மதிமுக சாா்பில் கருப்புக் கொடி காட்டி எதிா்ப்பு தெரிவிப்போம்.

உள்ளாட்சி தோ்தலில் மதிமுக கூட்டணி குறித்து அப்போது முடிவெடுப்போம். தற்போது திமுகவுடனான தோழமை தொடா்கிறது.

பெண்கள் மீதான வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு பிணை வழங்கக்கூடாது, அவா்களுக்கு வாழ் நாள் சிறை தண்டனை வழங்க வேண்டும்.

அமைச்சா் ஆதவ் அா்ஜூனா, விவசாயத்தை விட விளையாட்டுதான் சிரமம் என்று கூறியது விவசாயிகளை இழிவுபடுத்தும் பேச்சாகும் என்றாா் வைகோ.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.