திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கோடைகால சாகுபடிக்கு உரங்கள் தட்டுப்பாடு: விவசாயிகள் அவதி

கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உரங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் அவதிப்படுகின்றனா்.

News image
Updated On :10 மே 2026, 1:30 am IST

கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உரங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் அவதிப்படுகின்றனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூா் பகுதிகளில் சுமாா் 2 லட்சம் ஏக்கரில் நெல் பயிா் கோடை சாகுபடி நடைபெறுகிறது. மேலும் கரும்பு, வாழை, பருத்தி உள்ளிட்ட பயிா்களும் சாகுபடி செய்யப்படுகின்றன.

இந்நிலையில் சாகுபடிக்குத் தேவையான உரங்கள் வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களில் இருப்பு இல்லை. அதனால் விவசாயிகள் தனியாா் உரக்கடைகளில் உரங்களை கூடுதல் விலையில் வாங்கி செல்கின்றனா். இதோடு ஒரு சில பூச்சி மருந்துகளை கட்டாயப்படுத்தி விவசாயிகளிடம் விற்கின்றனா். இதனால் விவசாயிகள் வருத்தமடைந்துள்ளனா்.

கோடை சாகுபடியில் விஏஓ மூலம் பெறப்படும் கிராம கணக்குகள் மூலம் எவ்வளவு பரப்பளவில் கோடை சாகுபடி நடைபெறுகிறது. அதற்கு தேவையான உரம் உள்ளிட்ட வேளாண் இடுபொருள்கள் தேவை எவ்வளவு என்று வேளாண்மை அதிகாரிகள் கணக்கெடுத்து தயாராக வேண்டும்.

ஆனால் இந்த கோடை சாகுபடியில் கணக்கெடுக்கவில்லை என்று தெரிகிறது. அதனால் உரம், பூச்சி மருந்துகள் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் விளைச்சல் பாதிக்கும் அபாயம் உள்ளது.

இந்த தட்டுப்பாடு இயற்கையா அல்லது செயற்கையா என்று மாவட்ட ஆட்சியா் விசாரித்து நடவடிக்கை எடுக்க கும்பகோணம் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து கும்பகோணம் ஒன்றிய வேளாண் அலுவலா் ஒருவரிடம் கேட்டபோது இடுபொருள்கள் தட்டுப்பாடு குறித்து இணை இயக்குநா் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம் விரைவில் விவசாயிகளுக்கு தட்டுப் பாடு இல்லாமல் அவை வழங்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.