40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

மெணசியில் மின் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

News image

கோப்புப் படம்

Updated On :11 மே 2026, 2:40 am IST

மெணசி வட்டாரப் பகுதிகளில் நிலவும் மின் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள், விவசாயிகள் அவதிப்படுகின்றனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்கு உள்பட்ட மெணசி, பூதநத்தம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 10 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள கிராமங்களில் சுமாா் 5 ஆயிரம் போ் வசிக்கின்றனா். இந்த நிலையில், மெணசி வட்டாரப் பகுதியில் கடந்த சில தினங்களாக அடிக்கடி மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

கோடை வெப்பம் அதிகமாக உள்ள நிலையில் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் மின் நிறுத்தம் செய்யப்படுவதால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனா். கடந்த ஒருவாரமாக பிற்பகல் 3 மணிக்கு ஏற்படும் மின் தடையானது இரவு 10 மணி வரை நீடிப்பதாக அப்பகுதியில் உள்ள விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.

இதனால் வேளாண் பணிகள் முழுமையாக செயல்படுத்த முடியவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனா். எனவே, மெணசி வட்டாரப் பகுதியில் நிலவும் மின் தட்டுப்பாடுகளை நீக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.